Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை சமத்துவப் பொங்கலுடன் மிக விமரிசையாக கொண்டாடினர்.
இதில் பாரம்பரியக்கலை, நிகழ்ச்சிகள், கும்மிப்பாட்டு, ஒயிலாட்டம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், சிறிய கரண்டியில் எலுமிச்சை வைத்து விளையாட்டு, லக்கி கார்னர் என மாணவியர் பொங்கல் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் டிரினிடி அகாடமி நிர்வாகத்தினர் ஆர். குழந்தைவேல், கே. நல்லுசாமி, அருணா செல்வராஜ் , முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.